<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்கள் ஒரு சில கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள். அதில் கணவன் சாப்பிட்டவுடன், சாப்பிடுவது என்பது இன்று வரை அவர்கள் கடைபிடித்து வரும் கொள்கையாகும்.</p> <p style="text-align: center;"><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/739754a318e54e72bb188faa0ee329e9_S_secvpf300x225615x461.jpg" /></p> <p style="text-align: justify;">சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். வீட்டு வேலை காரணமாக நேரம் தாண்டி விட்டால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள். <span style="text-align: justify;">இது பொதுவாக பல பெண்களின் குணமாகும். </span></p> <h3>மூட்டுவலி ஏற்படக் காரணம்</h3> <p style="text-align: justify;">நேரத்திற்கு உணவு அருந்தாமையாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு உண்டாகிறது.</p> <p style="text-align: justify;">இது போல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாலும், சரியான நேரத்திற்க்கு சாப்பிடாமல் இருப்பதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது.</p> <p style="text-align: justify;">பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும். ஆனால் அது சீற்றம் கொள்ளும்போது மேல் நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது.</p> <p style="text-align: justify;">அங்கிருந்து பின் கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது.</p> <p style="text-align: justify;">இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது.</p> <h3>செய்ய வேண்டியவை</h3> <p style="text-align: justify;">இது போல பிரச்சினைகளை தவிர்க்கவும் ஆரோக்கியமாக மூட்டு வலியின்றி வாழவும், பெண்கள் சரியான நேரத்திற்க்கு சாப்பிடவேண்டும். குறிப்பாக வயதான பெண்கள் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுவர், இவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் சரியான நேரத்திற்கு சாப்பிட பழகிக் கொள்ளவேண்டும்.</p> <p style="text-align: justify;">வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் முழுமையாக பலன் தராது. இது போல விஷயங்களில் பெண்கள் தங்களை மாற்றிகொண்டால் மட்டுமே மூட்டுவலி போன்ற நோய்களில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்</p> <p style="text-align: justify;">ஆதாரம்: அரசு பொதுமருத்துவமனை, சென்னை</p> </div>