<div id="Middlecolumn_internal"> <h3>வெந்தயம்</h3> <ul> <li style="text-align: justify; "><span>வெந்தயம் தமிழில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.</span></li> <li style="text-align: justify; "><span>இரும்பு சத்து மனித உடலுக்கு தேவையான ஒன்றாகும். அந்த இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது.</span></li> <li style="text-align: justify; "><span>இதனால் மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.</span></li> <li style="text-align: justify; "><span>ட்ரோயோனெல்லா ஓயனம் கிரிக்கம் என்ற தாவர பெயரை கொண்டிருக்கும் வெந்தயம், ட்ரைகோ நெல்லின் என்ற மருத்துவ பொருளை கொண்டுள்ளது.</span></li> <li style="text-align: justify; "><span>வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.</span></li> </ul> <p style="text-align: center; "><img class="image-inline" src="https://static.vikaspedia.in/media_vikaspedia/ta/images/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/b9abbfba4bcdba4-baebb0bc1ba4bcdba4bc1bb5baebcd/fenugreekseeds.jpg" /></p> <h3 style="text-align: justify; "><span>இருமல், வயிற்று வலி, மூலம் போன்றவற்றை குணப்படுத்தக் மருந்து</span></h3> <ul style="text-align: justify; "> <li style="text-align: justify; "><span>இதற்கு தேவையான பொருட்கள் வெந்தய கீரை, தேன். வெந்தய கீரையின் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>ஒரு பிடி அளவு எடுத்து இதை நீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி கீரையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>இதனுடன் தேன் சேர்த்து தினமும் எடுத்து வருவதால், உடலில் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி, காரத்தால் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.</span></li> </ul> <p style="text-align: justify; "><span>அதே போல் மூலத்திற்கும் வெந்தயம் மருந்தாக விளங்குகிறது. இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.</span></p> <p style="text-align: justify; "><span> மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.</span></p> <h3><span>மார்பு வலி, மூச்சடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு மருந்து</span></h3> <ul style="text-align: justify; "> <li style="text-align: justify; "><span>இதற்கு தேவையான பொருட்கள், வெந்தயக் கீரை, ஒரு சுண்டைக்காய் அளவு புளி. காய வைத்த அத்தி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>உலர் திராட்சை, தேன். ஒரு பிடி வெந்தயக் கீரையை எடுத்து, ஒரு சுண்டைக் காய் அளவு புளியை சேர்க்க வேண்டும். ஒரு அத்தி பழம் சேர்க்க வேண்டும். 10 உலர் திராட்சை சேர்க்க வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>இதனுடன் ஒரு டம்ளர் அளவு நீர் சேர்க்க வேண்டும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>இதனுடன் தேன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தய கீரையுடன் அத்தி பழம், உலர் திராட்சையை சிறிது சேர்த்து தேநீராக்கி சாப்பிடுவதால் மார்பு தொடர்பான பிரச்னைகள் விலகும்.</span></li> <li style="text-align: justify; "><span>குறிப்பாக மாரடைப்பு, மூச்சு முட்டுதல், கார்டியாக் ஆஸ்துமா ஆகியவற்றிற்கு இது மருந்தாக பயன்படுகிறது.</span></li> <li style="text-align: justify; ">ஜீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது.</li> <li style="text-align: justify; "><span>இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது. இதய நோய் இல்லாமல் போகிறது. இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது.</span></li> </ul> <p style="text-align: justify; "><span>இவ்வாறு வெந்தயம் நமது உடலுக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது.</span></p> <p style="text-align: justify; ">ஆதாரம் - தினகரன் நாளிதழ்</p> </div>