<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify; ">கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும்.</p> <p style="text-align: justify; "><span>மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.</span></p> <ol> <li style="text-align: justify; "><span>இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.</span></li> <li style="text-align: justify; "><span>பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.</span></li> <li style="text-align: justify; "><span>இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் தீரும். சிறுநீர்ச்சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.</span></li> <li style="text-align: justify; "><span>இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.</span></li> <li style="text-align: justify; "><span>சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு,</span></li> <li style="text-align: justify; "><span> மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.</span></li> <li style="text-align: justify; "><span>இலைச்சாற்றை சர்க்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.</span></li> <li style="text-align: justify; "><span>கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் வரும் வயிற்றுவலி தீரும்.</span></li> </ol> <p style="text-align: justify; "><b>ஆதாரம் : </b><span>மாலைமலர் ஆரோக்கியம்</span></p> </div>