<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify; ">அறிகுறிகள்</h3> <p style="text-align: justify; ">நாம் உண்ட உணவு செரிக்காமல் இருப்பதைதான் அஜீரணம் என்கிறோம்.</p> <p style="text-align: justify; ">1. வயிறு உப்பசம்</p> <p style="text-align: justify; ">2. புளி ஏப்பம்</p> <p style="text-align: justify; ">3. வாய் துர்நாற்றம்</p> <p style="text-align: justify; ">4. பசி இன்மை</p> <p style="text-align: justify; ">5. அடிக்கடி கொட்டாவி</p> <p style="text-align: justify; ">6. நெஞ்சுக் கரிப்பு</p> <p style="text-align: justify; ">7. மலச்சிக்கல்</p> <p style="text-align: justify; ">8. வாயிற்று வலி</p> <p style="text-align: justify; ">9. குமட்டல், வாந்தி இவை அனைத்தும் அஜீரணத்தின் அறிகுறிகள் ஆகும்.</p> <p style="text-align: justify; ">இந்த அஜீரணம் ஏன் வருகிறது என்று பார்க்கும்போது அதற்கு காரணம்</p> <p style="text-align: justify; ">* நாம் உணவை அதிக அளவில் உண்பது</p> <p style="text-align: justify; ">* உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் விழுங்குவது</p> <p style="text-align: justify; ">* போதிய அளவு நீர் அருந்தாமை</p> <p style="text-align: justify; ">* சாப்பிட்ட உடன் அதிக நீர் அருந்துவது.</p> <p style="text-align: justify; ">* சரியான தூக்கம் இல்லாமை</p> <p style="text-align: justify; ">* மாமிச உணவுகளை அதிகம் உண்ணுதல்</p> <h3>தீர்க்க வழிமுறைகள்</h3> <p style="text-align: justify; ">* கொய்யாப்பழம் (250) கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும்</p> <p style="text-align: justify; ">* எலுமிச்சை சாறு மிகவும் பயன் தரும், இதனுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாரும் கலந்து அருந்தலாம்.</p> <p style="text-align: justify; ">* சுடு தண்ணீர் ஒத்தடம் வயிற்றின் மீது கொடுத்தாலும் அஜீரண கோளாறு நீங்கும்.</p> <p style="text-align: justify; ">* சாப்பிட்ட உடன் அரை குவளைக்கு மிகாமல் சுடு தண்ணீர் அருந்துவது நல்லது.</p> <p style="text-align: justify; ">* பப்பாளி பழத்தை காலை உணவாக தொடர்ந்து (20) நாட்களுக்கு உண்டுவந்தால் இந்த அஜீரணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.</p> <p style="text-align: justify; ">ஆதாரம் : அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி</p> </div>