<div id="MiddleColumn_internal"> <ul> <li style="text-align: justify; "><span>பிறப்புறுப்பில் புண் அல்லது இரணம்</span></li> <li style="text-align: justify; "><span>வாய், உதடுகள் மற்றும் ஆசனவாயிலும் புண்கள் தோன்றலாம்</span></li> <li style="text-align: justify; "><span>புண்கள் ஒற்றையாகவும் பலவாகவும் இருக்கலாம், வலியோடும் வலி இல்லாமலும் இருக்கலாம்</span></li> <li style="text-align: justify; "><span>ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமுமோ நெறிகட்டலாம்</span></li> </ul> <h3 style="text-align: justify; ">பரவும் முறை</h3> <p style="text-align: justify; ">பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் பிறப்பு வாய் ஆண் குறி ஆசனவாய் மலக்குடல் வாய் மற்றும் உதட்டில் உள்ள புண்களோடு தொடர்பு ஏற்படும்போது பரவுகின்றன.</p> <ul> <li style="text-align: justify; ">இவை சிபிலிஸ் என்ற கிரந்தி, டோனோவானோசிஸ் அல்லது கிரானுலோமா இங்குனேல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.</li> <li><span>புண்கள் ஆறிவிட்டது போல் தோன்றினாலும் புண்கள் இல்லாவிட்டாலும் கூட இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது.</span></li> </ul> <h3 style="text-align: justify; ">தடுப்பு முறை</h3> <p style="text-align: justify; ">உடலுறவுத் துணைவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளை குறைப்பது. துணைவர்கள் புண்கள் முழுமையாக ஆறும் வரையில் எந்த வகையிலும் புண்களோடு தொடர்பு ஏற்படாதவகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.</p> <h3 style="text-align: justify; ">பொதுவான அறிகுறிகள்</h3> <p style="text-align: justify; ">புண்கள் முழுமையாக குணமாகும் வரை உடலுறவை தவிர்ப்பதும், அல்லது ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்வதும் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மிக எளிய முறைகளாகும்.</p> <h3 style="text-align: justify; ">சிகிச்சை</h3> <ul> <li style="text-align: justify; "><span>இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) பென்சாத்தின் பென்சிலின் ஊசி மருந்தை ஒரே முறையும் அசித்ரோமைசின் மாத்திரை ஒரே முறையும் மருத்துவரின் கண்காணிப்பில் கொடுக்க வேண்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>மருந்துக்கு ஒவ்வாமை உள்ளதா என்று கண்காணிக்கவும்</span></li> <li style="text-align: justify; "><span>மருந்து செலுத்தப்பட்டதால் ஏதேனும் சிரமத்தை உணர்ந்தால் நோயாளி உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்</span></li> <li style="text-align: justify; "><span>சிகிச்சை முடிந்து ஏழு நாட்கள் கழித்து நோயாளி தொடர் கண்காணிப்புக்கு மருத்துவமனைக்கு வரவேண்டும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>மருந்து</b></p> <ul> <li style="text-align: justify; "><span>4 பென்சாத்தின் பென்சிலின் 2.4 மில்லியன் யுனிட் ஊசி மருந்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து சோதனை ஊசி போட்டு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தபின் இரண்டு புட்டங்களிலும் ஒவ்வொன்றாக போட வேண்டும். அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும்.</span></li> <li style="text-align: justify; "><span>4 நோயாளிக்கு பென்சிலின் ஒவ்வாமை இருந்தால் மருந்துப்பை எண் 4ல் உள்ள டாக்சிசைக்ளின் 100 மிகி மாத்திரையை இரண்டு வேளை வீதம் 15 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும் கொடுக்க வேண்டும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>விளைவுகள்</b></p> <ul> <li style="text-align: justify; "><span>இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டாலோ அரைகுறையாக சிகிச்சை எடுத்தாலோ சிறிது காலம் கழித்து ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் சிபிலிஸ் நோய் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை </span><span>பாதித்து மரணத்துக்கு காரணமாகிவிடும்.</span></li> <li style="text-align: justify; "><span>சிபிலிஸ் நோய் கருவுற்ற பெண்களிடமிருந்து குழந்தைக்கு பரவி குழந்தை இறந்து பிறக்கவும் குறையுடன் பிறக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது. கருவுற்ற தாய்க்கு பரிசோதனை செய்து சிபிலிஸ் நோய்க்கு சிகிச்சை செய்வதால் இதை தடுக்க முடியும்.</span></li> <li style="text-align: justify; "><span>மிக முக்கியமாக பிற பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய் தொற்றுக்கள் போல் இன உறுப்பில் புண் உள்ள நபருக்கு 5 முதல் 10 மடங்கு எச்ஐவி தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>துணைவரை பரிந்துரை செய்தல்</b></p> <ul> <li style="text-align: justify; "><span>நோயாளி கடந்த மூன்று மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்ஃகளுக்கு தனக்கு பால்வினை நோய் உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>எச்சரிக்கை</b></p> <ul> <li style="text-align: justify; "><span>ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் அல்லது அவரது பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.</span></li> <li style="text-align: justify; "><span>கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது துணைவர்கள் தங்கள் மருத்துவரிடம் அவர்களின் கர்ப்பத்தை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவர் குழந்தைக்கு தொற்று பரவாமல் காப்பாற்ற முடியும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><b>ஆதாரம் : </b>தமிழ்நாடு எய்ட்ஸ் சங்கம்</p> </div>