<div id="MiddleColumn_internal"> <h3>காரணங்கள்</h3> <ul> <li>மூக்கில் ஏற்படும் காயம்.</li> <li>கடினமான வேலை செய்தல்</li> <li>உயர் இரத்த அழுத்தம்.</li> <li>உயரமான மலை பகுதிகளில் இருக்கும் போது</li> <li>கடினமான முறையில முக்கு சிந்துதல்</li> </ul> <h3>மூக்கில் இரத்தம் வடிந்தால் என்ன செய்ய வேண்டும்</h3> <ul> <li style="text-align: justify; ">உட்கார்ந்து கொள்ள வேண்டும்.</li> <li style="text-align: justify; ">மூக்கில் வடியும் இரத்தம் தொண்டை பகுதிக்குள் செல்லாமல் தடுக்க, தலையை லேசாக முன்பக்கமாக சாய்த்து கொள்ளவேண்டும்.</li> <li style="text-align: justify; ">குளிர்ந்த நீரில் நனைத்த ஈரமான துணியினை முக்கில் வைப்பதன் மூலம் இரத்த குழாய்களை சுருங்கச் செய்து இரத்தம் வடிவதை நிறுத்தவும்.</li> <li style="text-align: justify; ">இரத்தம் ஒரு மூக்கு துவாரத்திலிருந்து மட்டும் வடிந்தால் அந்த நாசித்துவாரத்தின் மேல்பகுதியில் லேசாக அழுத்தவும்.</li> <li style="text-align: justify; ">இரத்தம் இரு நாசித்துவாரத்திலிருந்தும் வடிந்தால் இரண்டு நாசித்துவாரத்தையும் குறைந்தது 10 நிமிடங்கள் இருக்க பிடித்துக் கொள்ள வேண்டும்.</li> <li style="text-align: justify; ">இரத்தம் வடிவது தொடர்ந்தால், அடுத்து 10 நிமிடங்கள் மூக்கை அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.</li> <li style="text-align: justify; ">மூக்கில் ஏற்படும் நேரடி காயத்தால் இரத்தம் வடிதல் ஏற்பட்டால், மென்மையான அழுத்தத்தை மாத்திரம் பிரயோகிக்க வேண்டும்.</li> <li style="text-align: justify; ">மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் நிற்காமல தொடர்ந்து இருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தாலோ மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.</li> </ul> </div>