<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify; ">அறிமுகம்</h3> <p style="text-align: justify; "><span>இயல்பான காதுகேட்கும் திறன் கொண்ட ஒருவரைப் போல் காதுகேட்க இயலாததே காதுகேளாமை என உலக சுகாதார அமைப்பு வரையறுக்கிறது. காது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கேட்கும் திறன் குறையும் அல்லது செவிட்டுத்தன்மை ஏற்படும். ஒருவருக்கு அறவே காதுகேட்கவில்லை என்றால் அவருக்குச் செவிட்டுத்தன்மை இருக்கிறது எனலாம்.</span></p> <p style="text-align: justify; "><span>காது கேளாமை மரபு வழியாகவும், தாய்வழி ரூபெல்லா நோய்த்தொற்று அல்லது பிறப்பின்போது ஏற்படும் சிக்கல், மூளைக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள், கேள்திறனைப் பாதிக்கும் நச்சு மருந்துகள், மிகை ஒலி, மூப்பு போன்றவற்றாலும் உண்டாகலாம்.</span></p> <p style="text-align: justify; "><span><strong>கேதுகேளாமையால் உண்டாகும் பாதிப்புகள்</strong></span></p> <p style="text-align: justify; "><span><strong>செயல்பாதிப்பு</strong></span></p> <ul> <li style="text-align: justify; "><span>பிறரோடு உரையாட இயலாமல் போவதே காதுகேளாமையின் முக்கிய பாதிப்பாகும். குழந்தைகளால் பேச்சுமொழியை வளர்க்க முடியாது.</span></li> <li style="text-align: justify; "><span>காது கேளாமையும் இடைச்செவியழற்சி போன்ற காது நோய்களும் குழந்தைகளின் கல்வி பயிலும் முறையை அதிகமாகப் பாதிக்கும். எனினும் காதுகேளாமை குறைபாடு உள்ளவர்களுக்கும் தகவல் தொடர்புக்கான வாய்ப்பைக் கொடுத்தால் அவர்களும் பிறரைப்போல செயலாற்ற முடியும்.</span></li> <li style="text-align: justify; "><span>தகவல் தொடர்பு பேச்சு/எழுத்து அல்லது குறி மொழியில் நடைபெற முடியும்.</span></li> <li style="text-align: justify; "><span>சமூக மற்றும் உணர்வுத் தாக்கம்</span></li> <li style="text-align: justify; "><span>தகவல் தொடர்பு தடைபடும் போது அது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். தனிமை, பிரிவு, அதிருப்தி போன்ற உணர்வுகள் உண்டாகும். குறிப்பாகக் காது கேளாத முதியோரை இது மிகவும் பாதிக்கும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><span><strong>பொருளாதாரத் தாக்கம்</strong></span></p> <p style="text-align: justify; "><span>வளர்ந்துவரும் நாடுகளில் காதுகேளாமை குறையுள்ள பிள்ளைகளுக்குப் பள்ளிப்படிப்பு கிடைப்பதில்லை. காது கேளாத பெரியவர்களில் பலர் வேலை வாய்ப்பின்றி துன்பப்படுகின்றனர். வேலையில் இருப்போர்களிலும் பெரும்பாலோனோர் பொதுவான உழைப்போரோடு ஒப்பிடும்போது கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.</span></p> <h3><span>நோயறிகள்</span></h3> <p style="text-align: justify; "><span>காதுகேளாமையின் ஆரம்ப அறிகுறிகளாவன:</span></p> <ul> <li style="text-align: justify; "><span>பிறர் பேசுவதைக் கேட்பதில் சிரமம்</span></li> <li style="text-align: justify; "><span>மீண்டும் கூறுமாறு பிறரிடம் கூறுதல்</span></li> <li style="text-align: justify; "><span>அதிக ஒலியில் இசைகேட்டல் அல்லது தொலைக்காட்சி பார்த்தல்</span></li> <li style="text-align: justify; "><span>தொலைபேசி அல்லது அழைப்புமணியைக் கேட்க இயலாமை</span></li> <li style="text-align: justify; "><span>குழந்தைகளில் அறிகுறி</span></li> <li style="text-align: justify; "><span>பேசுவற்கு அதிக நாட்களாதல் அல்லது பேசும்போது தெளிவின்மை</span></li> <li style="text-align: justify; "><span>திரும்பக் கூறும்படி கேட்டல்</span></li> <li style="text-align: justify; "><span>சத்தமாகப் பேசுதல்</span></li> <li style="text-align: justify; "><span>அதிக ஒலியில் தொலைக்காட்சி பார்த்தல்</span></li> </ul> <p style="text-align: justify; ">இவை யாவுமே காது கேட்கும் திறனில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன. உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.</p> <h3><span>காரணங்கள்</span></h3> <p style="text-align: justify; ">கேட்கும்திறன் குறைபாடு அல்லது காதுகேளாமை ஒன்றில் பிறவியில் அல்லது பிறப்புக்குப் பின் உண்டானதாக இருக்கும்.</p> <p style="text-align: justify; "><span><strong>மரபியல் காரணங்கள்</strong></span></p> <p style="text-align: justify; "><span><strong>காது கேளாமைக்கு இட்டுச்செல்லும் மரபியல் காரணங்களாவன:</strong></span></p> <ul> <li style="text-align: justify; "><span>தாய்வழி தொற்றுக்களான ரூபெல்லா, மேகநோய் அல்லது கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிற தொற்று நோய்கள்</span></li> <li style="text-align: justify; "><span>பிறப்பில் எடைகுறைவு</span></li> <li style="text-align: justify; "><span>பிறப்பின் போது உயிர்வளிக் குறைவு</span></li> <li style="text-align: justify; "><span>கர்ப்ப காலத்தில் காதுநச்சு மருந்துகளை முறையற்று பயன்படுத்துதல் (அமினோகிளைக்கோசைடுகள், சைட்டோடாக்சிக் மருந்துகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள், டையுரெட்டிக்ஸ் போன்றவை) பிறப்புக்கு முன்னான கடும் மஞ்சள் காமாலை பிறந்த குழந்தையின் காது நரம்பைப் பாதிக்கும்.</span></li> </ul> <p style="text-align: justify; "><strong>பிறப்புக்குப் பின்னான காரணங்கள்:</strong></p> <p style="text-align: justify; "><span><strong>இது எந்த வயதிலும் ஏற்படும்</strong></span></p> <ul> <li style="text-align: justify; "><span>மூளைக்காய்ச்சல், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற தொற்று நோய்களால் சிறுவயதில் காதுகேளாமை ஏற்பட்டாலும் பின்னரும் உண்டாகலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>வடிதலோடு கூடிய நீடித்த காது தொற்று நோய்கள் காது கேளாமைக்கு வழிவகுக்கும். மூளையில் சீழ் சேர்தல், மூளைக்காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் சில நேரங்களில் இது வழிவகுக்கும்.</span></li> <li style="text-align: justify; "><span>காதில் நீர்கோத்தலும் காதுகேளாமையை உண்டாக்கும்.</span></li> <li style="text-align: justify; "><span>சில நுண்ணுயிர்க்கொல்லிகளையும், எதிர்மலேரியா மருந்துகள் போன்ற காதுநச்சு மருந்துகளையும் பயன்படுத்தும்போது எந்த வயதிலும் அவை உட்காதைச் சேதப்படுத்தலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>தலை அல்லது காதுக் காயத்தால் கேட்கும் திறனை இழக்கலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>துப்பாக்கி அல்லது வெடி சத்தம் போன்ற அதிக ஒலி உள்ள இடங்களில் பணி செய்வதும் ஒருவரின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.</span></li> <li style="text-align: justify; "><span>உணர்ச்சி உயிரணுக்கள் சிதைவதால் வயது தொடர்பான செவிட்டுத்தன்மை ஏற்படுகிறது.</span></li> <li style="text-align: justify; "><span>மெழுகு அல்லது அயல் பொருட்கள் காதுப் பாதையை அடைத்துக்கொண்டால் எந்த வயதிலும் காதுதிறன் இழக்கும்</span></li> </ul> <h3><span>நோய்கண்டறிதல்</span></h3> <p style="text-align: justify; ">கேட்பதில் பிரச்சினை ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். அவர் காதுமானி கொண்டு அசாதரணமாக எதுவும் உள்ளதா என்று காதைச் சோதிப்பார்.</p> <h3 style="text-align: justify; ">நோய் மேலாண்மை</h3> <ul> <li style="text-align: justify; "><span>உட்காதில் உள்ள அடைப்பால் கேட்புத்திறன் குறைந்தால் சொட்டுமருந்து அல்லது உறிஞ்சல் முறை மருத்துவம் அளிக்கலாம்</span></li> <li style="text-align: justify; "><span>பாக்டீரியா தொற்றுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகளால் மருத்துவம் அளிக்கலாம்</span></li> <li style="text-align: justify; "><span>எனினும், உட்காது அல்லது நரம்பு சிதைவால் ஏற்படும் கேட்கும்திறன் இழப்பு நிரந்தரமானது</span></li> <li style="text-align: justify; "><span>காது கருவி கேட்க உதவுகிறதே தவிர அது மருத்துவம் அல்ல.</span></li> <li style="text-align: justify; "><span>அது எல்லோருக்கும் ஏற்றதல்ல. மருத்துவர் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.</span></li> </ul> <h3><span>தடுப்புமுறைகள்</span></h3> <ul> <li style="text-align: justify; "><span>காது கேளாமையைத் தடுக்க முடியாது. எனினும் ஆபத்தான காரணிகளைத் தவிர்க்கலாம்.</span></li> <li style="text-align: justify; "><span>தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பார்க்கக் கூடாது.</span></li> <li style="text-align: justify; "><span>அதிக ஓசையுள்ள இடங்களில் பணியாற்றும்போது காதடைப்பானைப் பயன்படுத்தவும்.</span></li> <li style="text-align: justify; "><span>எந்தப் பொருளையும் காதுக்குள் நுழைக்கதீர்.</span></li> </ul> <p style="text-align: justify; "><strong>ஆதாரம் : </strong>தேசிய சுகாதார ஆணையம்</p> </div>