<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;"><strong>விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">மருந்தை இட்டு, தொப்புள் கொடியை சுத்தம் செய்யும் முறைக்கு தொப்புள் கொடி கவனிப்பு என்று பெயர்.</p> <h3 style="text-align: justify;">நோக்கம்</h3> <p style="text-align: justify;">• உடலில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றை தடுக்கவும் மற்றும் கொடியை சுத்தம் செய்யவும்.</p> <p style="text-align: justify;">• கொடியில் இருக்கும் அறிகுறிகளுடன் கூடிய நோய்த்தொற்றை தணிக்கை செய்து பார்வையிடுதல்</p> <h3 style="text-align: justify;">தேவையான பொருட்கள்</h3> <p style="text-align: justify;">1. பஞ்சு (தூய்மை செய்ய பயன்படும் உறிஞ்சு பொருள்)</p> <p style="text-align: justify;">2. ஸ்பிரிட்</p> <p style="text-align: justify;">3. மருந்துகள் (உத்தரவிடப்பட்டிருந்தால்)</p> <p style="text-align: justify;">4. காகிதப்பை (கழிவுகளை அகற்ற)</p> <h3 style="text-align: justify;">செய்முறை</h3> <p style="text-align: justify;">* தேவையானப் பொருட்களை குழந்தையின் அருகில் வைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">* கொடியில் அறிகுறிகளுடன் கூடிய நோய்த்தொற்று இருந்தால் பார்வையிடுதல் மற்றும் சீழ் நிலை இருந்தால் மேற்கொண்ட நடவடிக்கை எடுத்து தீர்மானம் செய்ய வேண்டும்.</p> <p style="text-align: justify;">* ஸ்பிரிட்டை வைத்து இடையூறு இல்லாமல் கொடியை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் நோய்த்தொற்று கொடியில் ஏற்படாமல் தடுக்க மருந்தை தடவ வேண்டும்.</p> <p style="text-align: justify;">* பயன்படுத்திய பஞ்சுடைகளை நீக்கி மற்றும் கைகளை நன்கு கழுவி, பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">* செய்முறையை பதிவு செய்து, கொடியை கூர்ந்து கவனிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்</p> </div>