<div id="Middlecolumn_internal"> <h3 style="text-align: justify;">பள்ளிகளில் எளிதில் கிடைக்க வேண்டிய உணவுகள் </h3> <p style="text-align: justify;">நம் இந்தியா ஒரு விவசாய தேசம். மக்கள் தொகை பெருக்கமும், தொழில் வளர்ச்சி, நகரமாக்கள் என்ற பெயரில் விளை நிலம் விலை நிலமாக மாற்றம் பெற்று வருவதை நாம் அறிவோம். மேலும் நான்கு வழிச்சாலை என்று விளை நிலங்கள் மேல் அழித்து வருவது முன்னேற்றமா? இருக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் அனைத்தும் பூசிக்கொல்லிக்கும், ரசாயன உரங்களுக்கும், வேதி பொருட்களுக்கும் அடிமைப்பட்டு நகரம் நரகமாகி வருவதை நாம் அறிவோம்.</p> <p style="text-align: justify;">எனவே நகரங்களில் இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை என்று விளம்பர வியாபார யுக்தியில் ரசாயன உர பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பள்ளி கல்லூரிகளில் உள்ள கடைகளில் சத்தான பழங்களும் (கொய்யாபழம், நெல்லிக்காய், சாத்துக்குடி, வாழைப்பழம்...) குழந்தைகளுக்கு தேவையான அவித்த உணவுகளான பணியாரம், புட்டு... விற்க அரசு கட்டாயபடுத்த வேண்டும்.</p> <p style="text-align: justify;">இதனை விவேகானந்தா கல்லூரியில் இயற்கையாக பயிரிடப்பட்ட பொருட்கள் கொண்டு மாணவர்களுக்கு உணவு வழங்குவதையும், பழங்களும், பால் பொருட்களும் இயற்கை உணவாக கொடுப்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான பள்ளி, கல்லூரிகளில் குப்பை உணவுகளும், அதிகம் வறுக்கப்பட்ட பொருட்களும், செயற்கை கலரூட்டப்பட்ட உணவும் விற்கப்படுவது, நாமே நாம் குழந்தைகளை நோயில், புற்று <span id="36_TRN_40">நோயில் வளர்ப்பதற்கு சமம். எனவே சத்தான உணவுப்பொருட்கள் எளிதில் <span id="36_TRN_49">கிடைக்க வழி வகை செய்தல் நாம் வருங்காலம் நலம் பெரும். வளம் பெரும்.</span></span></p> <p style="text-align: justify;">ஆதாரம்: சர்ச்சில் துரை</p> </div>